விநாயகர் சதுர்த்தி
எங்கள் வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படும் பண்டிகை இது.வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று எங்களது சொந்த ஊரான (அப்பா பிறந்த ஊர் ) நெப்புக்கோவிலுக்கு சென்று கொண்டாடுவது எங்கள் வழக்கம்.நெய்குப்பை என்பதே அந்த ஊரின் இயற் பெயர்.பின்னாளில் அந்த பெயர் மருவி நெப்புக்கோவில் என்று ஆனது .
நெப்புக்கோவிலும் விநாயகர் சதுர்த்தியும்
விநாயகர் சதுர்த்தி அன்று காலை நெப்புக்கோவிலுக்கு பஸ்ஸில் செல்லுவோம் . திருவிழந்தூர் நைனா கடைக்கு எதிரில் பஸ் ஸ்டாப் . 7.15 மணிக்கு 18 A பஸ் வரும். கருவாட்டு வாசனையும் scent வாசனையும் கலந்த 45 நிமிட பயணம் அது .
நெப்புக்கோவில் சிமெண்ட் பாலம் நாங்கள் இறங்க வேண்டிய bus stop . பஸ்ஸை விட்டு இறங்கி பாலம் தாண்டி செல்ல வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் சல சல வென்று ஓடிக்கொண்டிருக்கும். பாலம் கடந்து ஊருக்குள் நடந்து செல்லும் வழியில் உள்ள எங்கள் பிள்ளையார் கோவிலை சுற்றி விட்டு வீட்டுக்கு செல்லுவோம் .
தெரு முழுவது பெரிய பெரிய கோலங்கள். தெருவுக்குள் நுழைந்ததும் ஏதோ தங்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவது போல அனைவரும் நலம் விசாரிப்பார்கள் . எங்கள் வீடு திண்ணை மற்றும் இரண்டு முற்றம் வைத்த பெரிய ஓட்டு வீடு . கிணறும் பின்னர் தோட்டமும் தனி.
அப்பாக்களும் அண்ணன்களும் கடைகளுக்கு கிளம்பி விட, நாங்கள் அரட்டை கச்சேரியும் ,அம்மாக்கள் பர பரவென்று என்று வேலையும் தொடங்குவார்கள்.
அம்மாக்கள் சமையலில் இருக்க,"கோவிலில் பிள்ளையாருக்கு தீவார்த்தனை ஆக போகுது . சீக்கிரமா வாங்க" - பெரியப்பா அழைப்பு விடுப்பார்.
கோவிலில் பிள்ளையாரை பூவில் அலங்கராம் செய்து அழகாய் அலங்கரித்து இருப்பார்கள்.
தீவார்த்தணை முடிந்து பிள்ளையாரை மேல தாளத்தோடு 4 வீதிக்கும் ஊர்வலமாக எடுத்து செல்வார்கள் . அப்பாக்களும், அண்ணன்களும் பிள்ளையாரோடு ஊர்வலத்தில் செல்வார்கள் .
தெருவில் உள்ள அனைவரும் பிள்ளையாருக்கு தேங்காய் ,பூ ,பழம் தந்து வணங்குவார்கள் .
ஊர்வலம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு வந்ததும் வடை பாயாசத்தோடு இலையில் மதிய சாப்பாடு .
சாப்பிடும் போது எத்தனை எத்தனை நகைச்சுவை உரையாடல்கள் ! வயிறும், மனதும் நிறைந்தே இருக்கும்.
மாலை கொழுக்கட்டை செய்ய தொடங்குவாராகள் .நானும் கழ்ட்டப்பட்டு கொழுக்கட்டை செய்ய முயற்சிப்பேன்.ஓரு முறை கூட அது கொழுக்கட்டை மாதிரி வந்தது இல்லை . படைத்து முடித்து கொழுக்கட்டை சாப்பிட்ட பின் மாலையே வீடு திரும்பி விடுவோம்.
வரும் வழியில் தெருவுக்கு தெரு கோலா கலமாக அலங்கரிக்கப்பட்ட பிள்ளையர்கள்.எல்லாவற்றயும் வேடிக்கை பார்த்து கொண்டே வீட்டிற்கு வருவோம் .
நிகழ்வுகள் அழகாகும்...உறவுகளோடு இருக்கும் போது !.
தெரு முழுவது பெரிய பெரிய கோலங்கள். தெருவுக்குள் நுழைந்ததும் ஏதோ தங்கள் வீட்டுக்கு விருந்தினர் வருவது போல அனைவரும் நலம் விசாரிப்பார்கள் . எங்கள் வீடு திண்ணை மற்றும் இரண்டு முற்றம் வைத்த பெரிய ஓட்டு வீடு . கிணறும் பின்னர் தோட்டமும் தனி.
அப்பாக்களும் அண்ணன்களும் கடைகளுக்கு கிளம்பி விட, நாங்கள் அரட்டை கச்சேரியும் ,அம்மாக்கள் பர பரவென்று என்று வேலையும் தொடங்குவார்கள்.
அம்மாக்கள் சமையலில் இருக்க,"கோவிலில் பிள்ளையாருக்கு தீவார்த்தனை ஆக போகுது . சீக்கிரமா வாங்க" - பெரியப்பா அழைப்பு விடுப்பார்.
கோவிலில் பிள்ளையாரை பூவில் அலங்கராம் செய்து அழகாய் அலங்கரித்து இருப்பார்கள்.
தீவார்த்தணை முடிந்து பிள்ளையாரை மேல தாளத்தோடு 4 வீதிக்கும் ஊர்வலமாக எடுத்து செல்வார்கள் . அப்பாக்களும், அண்ணன்களும் பிள்ளையாரோடு ஊர்வலத்தில் செல்வார்கள் .
தெருவில் உள்ள அனைவரும் பிள்ளையாருக்கு தேங்காய் ,பூ ,பழம் தந்து வணங்குவார்கள் .
ஊர்வலம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு வந்ததும் வடை பாயாசத்தோடு இலையில் மதிய சாப்பாடு .
சாப்பிடும் போது எத்தனை எத்தனை நகைச்சுவை உரையாடல்கள் ! வயிறும், மனதும் நிறைந்தே இருக்கும்.
மாலை கொழுக்கட்டை செய்ய தொடங்குவாராகள் .நானும் கழ்ட்டப்பட்டு கொழுக்கட்டை செய்ய முயற்சிப்பேன்.ஓரு முறை கூட அது கொழுக்கட்டை மாதிரி வந்தது இல்லை . படைத்து முடித்து கொழுக்கட்டை சாப்பிட்ட பின் மாலையே வீடு திரும்பி விடுவோம்.
வரும் வழியில் தெருவுக்கு தெரு கோலா கலமாக அலங்கரிக்கப்பட்ட பிள்ளையர்கள்.எல்லாவற்றயும் வேடிக்கை பார்த்து கொண்டே வீட்டிற்கு வருவோம் .
நிகழ்வுகள் அழகாகும்...உறவுகளோடு இருக்கும் போது !.